மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கெங்கா ஸ்டான்லி

அவை தேடும் மக்கள்

மயக்கும் மாலைப்பொழுது
தயவில் நாமும் மகிழ்ந்து.
தகிக்கும் வெயிலில் வியந்து
தவிக்கும் உயிரினம் தளர்ந்து.

நேற்று அப்படி இருந்த நிலை
இன்று குளிரில் கொஞ்சம் நடுங்கி
நாளை என்ன நடக்குமென
நயந்து நாமும் நாடித்தேட.

கோடை காலம் பிறந்தது
கோபியரும் ஆடல் பாடலுடன்.
மனமும் மகிழ்வில் திளைக்க
விடுமுறைக்கு மக்கள் பறக்க.

பறப்போர் பரவசம்
பல நாடுகள் பார்வை.
மறுப்போர் சிலர்
கடல் மட்டும் நாட.

இவை இல்லார் இல்லமதிலிருக்க
சுவை இல்லா மாந்தர்
சுருங்கியபடி தவிக்க
அவை தேடும் மக்கள்
அகிலம் செல்கிறார்.

கெங்கா ஸ்டான்லி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading