திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கெங்கா ஸ்டான்லி

விடுமுறை

விடுமுறை முடிந்தது
வீடு திரும்பியது.
பாடசாலை திறந்தது,
பழையபடி வேலையும் ஆரம்பம்.
இப்படியே ஓடும் வாழ்க்கை.
வசந்தம் கொண்டு
வந்த விடுமுறை
அடுத்த ஆண்டு வரை
காத்திருக்கும் ஆனவரை.
விடுமுறையில் களித்த
மகிழ்வான தருணமதை நினைத்து,
அடுத்த கோடைக்கான
எதிர்பார்ப்பு.
கோடைவிடுமுறை
குதூகலமானது.
வாடை வரும்வரை.
வசந்தம் தருவது.
வெய்யில் நிறைந்த காலம்,
வெண் மணலைத் தேடும் நேரம்.
கண்கள் பசுமை காட்சிகாணும்.
விரும்பிய இடமெல்லாம் சுற்றலாம்
விருந்தினர் பலரும் வரலாம்..
கோவில் திருவிழாக்கள் கும்மாளம்
கொண்டாட்டங்கள் கூடியதில்.
மக்கள் மனதில் மகிழ்வோட்டம்
மகிழ்ந்து கொண்டாடும் நெகிழ்ச்சி.
நாடுபல சுற்றிய நயமது வியந்து
கூடுகள் சென்று கூடிய நேரம்.
கூட்டமும் நாட்டமும்
கலைந்தது போகம்.
போகத்தில் மிதந்தோம் நாம்
வியூகம் சரியாக அமைந்ததால்.
அடுத்த தலைமுறையை
அனுசரித்தோம் நாம்
விடுமுறையும் வரட்டும்
என்று காத்திருந்த படி.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading