மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கெங்கா ஸ்டான்லி

தேடும் விழிக்குள் தேங்கிய வலி

பத்து மாதம் சுமந்து பெற்று
பாதி வழியில் தொலைத்து விட்டு.
சொந்த பந்தம் தூர விலகி
எந்தச் செயலும் எடுபடவில்லை.

கூட்டுக்குள் இருந்த குருவிக் குஞ்சுகள்
வேட்டுச் சத்தம் கேட்டு வெளியேறின.
பாட்டுப் பாடி கவலையின்றி வாழ்ந்தவர்.
நாட்டுப் பிளவால் நடைப்பிணமாய் எங்கோ!

தாய் தந்தை பிள்ளைகள் அழகிய குடும்பம்
தரங்கெட்ட அரசால் சிதறிய பிம்பம்.
தாயுடன் பிள்ளை இல்லை தந்தை இல்லை
விழிகள் தேடும் வரவை நோக்கிய ஏக்கம்.

விசாரணை என்ற பெயரில்
அள்ளிச் சென்றனர்
வேட்டையாடவா தள்ளிச்
சென்றனர்.
விசாரிக்கவும் இல்லை விடுதலையும் இல்லை
காத்திருக்கும் தாய்க்கு, மணைவிக்கு
காத்திரமான பதிலுமில்லை.

என்ன தான் கூச்சல் போட்டு கேட்டும்
நீதியும் கிடைக்கவில்லை.
நிவாரணமும் கிடைக்கவில்லை
யாரும் கருத்திலெடுக்கவுமில்லை.

கருத்தில் எடுத்திருந்தால்
தேடும் விழிக்குள் தேங்கிய வலி
கொஞ்சம் குறைந்திருக்கும்.

மனச்சுமையுடன் மாறா சோகத்துடன்,
துவளும் மனிதருக்கு விடை தர யாருமில்லை
தேடும் விழிக்குள் தேங்கிய வலி
தீரும் நாளை எதிர்பார்த்த படி.

கெங்கா ஸ்டான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading