நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
வலி
———-
வார்த்தைகள் அளந்து
பேச வேண்டும்
வார்த்தைகள் கண்டபடி
பேசினால்
மனதில் ஏற்படும் வலி
சிலர் செய்கையால்
மனமோ தவிக்கும் வலி
சொந்தம் பந்தம் என
அருகில் நின்று தரும்வலி
நட்பு என்று சொல்லி
நாவினால் பேசுவது வலி
நொந்து போன உள்ளத்தை
நோண்டி விறாண்டுவது வலி
எச்சங்கள் சொச்சங்கள்
தூற்றுவது வலி
உடைந்த உள்ளமதை
உணர்ச்சிகளை புரியாது
புத்தி சொல்வதாய் கொல்வது வலி
இத்தனை வலியையும் இறைவன்
கொடுத்தது
என்துணை என்னுடன்
இல்லாத தாலோ
இதைவிட பெரிய வலி
என்ன!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
9.9.24

Nada Mohan
Author: Nada Mohan