” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
அதிரடி
————
அதிரடியாக்க் காதலித்து
பொடிப்பொடியாகப் போனதே
சதுரடி கேட்டதன் விளைவோ
புதுச் சரவெடி புட்டு வைத்ததே
மதிவழி சென்று மகத்துவம் காண
விதிவழி வந்த வேளை வேண்டாமென்றதே
கனவுகள் காணும் வயதில்
கற்பனைகள் மிதந்து நிற்குறதே
அதிரடியாக அவையும்
நடைமுறை யாகிறதே
அதிரடித் தாக்குதலால்
அழிந்தவை தான்எவ்வளவு
அத்தனையும் இன்று
நினைக்கையில்
எம்மண் எம்தேசம்
வளங்கெட்டு பலம் குறைந்து போனதே
அதிரடிகள் தேவையுமில்லை
அதனால் ஒரு பயனுமில்லை
சொல்லடி இன்றி அகிம்சையால்
அன்பால் சாதித்திடு
அளவோடு. எல்லாமே !
நன்றியுடண்
கெங்கா ஸ்ரான்லி
7.10.24

Nada Mohan
Author: Nada Mohan