கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மாசி
——-
மாசிப் பனி மூசிப்பெய்யும் என்பர்
மாசிப் பனி குளிரால் உறைகிறது
உடம்பு வெடவெடக்கிறது
பல்லு கிடுகிடுக்கிறது
மேகமூட்டம் இருளாய் உள்ளது
பாதையும் தெரியவில்லை
பயணமும் கஷ்டத்திலை
குளிர் ஒரு பக்கம் இருட்டொரு பக்கம்
காலைவேளை மகிழ்ச்சி யில்லை
கதிரவன் வந்தால் களிகூரும் மனம்
இல்லையெனில் மந்தமாக இருக்கும்
இது இயற்கையின் நியதி
இன்னும் கொஞ்ச நாள்
இவை கடந்திடும்
இளவேனில் வரும்
இதயமும் சிலிர்க்கும்
துன்பமும் கரையும்
பனி கரைவது போல
மாசிப் பனியே மறைந்து விடு
காணும் உன் வருகை!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading