” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

தாங்கள் தாயகத்திலா பாவை அண்ணா
சந்தம் சிந்தும் கவிதை
ஆற்றல்
அன்பெனும் ஆற்றல்
அதீத தேற்றல்
அ ங்கேயும் உண்டாம்
மனதில் வற்றல்
கிழக்கில் உதிக்கின்ற
சூரியன்
மேற்கில் மறையுதே
இது யார் ஆற்றல்
பஞ்ச பூதங்களின் ஆற்றல்
பசுமை புரட்சி செய்யும் ஆற்றல்
சங்கம் அமைத்து தமிழ்
வளர்த்த ஆற்றல்
எங்கும் வியாபித்து ஏகோபிக்கும்
ஆற்றல்
இவை இப்படி இருக்க
மனிதனின் ஆற்றலோ
மகத்துவமானது
மண்ணிலே இவர் ஆற்றல்
விசித்திரமானது
தொழில் நுட்ப ஆற்றல்
தோண்டி தோண்டி துருவுவது
பழிகள் பல சுமந்து
பகடைக்காயும் ஆகுது
வழிகள் பல இருக்கு
வாழ்வை வளம்படுத்த
இழிசெயல் எலாம் விடுத்து
இனிமேல் ஒழுக்கமாய்
ஆற்றலோடு அமைதியாக
வாழ்க
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan