நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மூண்ட தீ

——-/—
பட்டினத்தார் பாடிய தீ
அன்னையின் ஈமத்திற்கு
மூட்டிய தீ யாம்
அகிலமே அறிந்தது
அனுமான் மூட்டிய தீ
இலங்கையை எரித்தது
இலக்கிய வரலாறு
கண்ணகியால் மூண்ட தீ
மதுரையை அழித்தது
மாண்பியல் வெளிப்பாடு
மனதிலே மூண்ட தீ
மந்திரித்து விட்டதுபோல்
உணர்விலே வெப்பம்
உடலிலே நடுக்கம்
தணிவது எப்படி
தீக்கிரையாக்கிய அவருடல்
அஸ்தியை நீரூக்கு தாரை வார்த்தது
நினைவிலே மூண்ட தீ
நித்தமும் எரிகிறது
மூண்ட தீ முற்றுப் பெறாது
அமேசன் காடு எரிந்தது போல
எரிந்து கொண்டே இருக்கும்
முடிவா முடியுமா
கெங்கா ஸ்ரான்லி
30.5.23

Nada Mohan
Author: Nada Mohan