கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மூண்ட தீ

——-/—
பட்டினத்தார் பாடிய தீ
அன்னையின் ஈமத்திற்கு
மூட்டிய தீ யாம்
அகிலமே அறிந்தது
அனுமான் மூட்டிய தீ
இலங்கையை எரித்தது
இலக்கிய வரலாறு
கண்ணகியால் மூண்ட தீ
மதுரையை அழித்தது
மாண்பியல் வெளிப்பாடு
மனதிலே மூண்ட தீ
மந்திரித்து விட்டதுபோல்
உணர்விலே வெப்பம்
உடலிலே நடுக்கம்
தணிவது எப்படி
தீக்கிரையாக்கிய அவருடல்
அஸ்தியை நீரூக்கு தாரை வார்த்தது
நினைவிலே மூண்ட தீ
நித்தமும் எரிகிறது
மூண்ட தீ முற்றுப் பெறாது
அமேசன் காடு எரிந்தது போல
எரிந்து கொண்டே இருக்கும்
முடிவா முடியுமா
கெங்கா ஸ்ரான்லி
30.5.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading