கெங்கா ஸ்ரான்லி

காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய்
——————————
புலப்பெயர்வில் புதுப்புது சோகம்
புரியமுடியா பலப்பல மாற்றம்
எங்கும் எதிலும் வேற்று மொழி
எங்கே எம் இனிய தமிழ் எனத்தேடுகையில்
காற்றின் மொழியாகி வானலையில் தமிழ்
காதிலே கேட்டதும் கனிந்தது மனம்
வீட்டுக்குள் இருக்கும் நமக்கு உற்றநட்பாய்
ஓயாது ஒலித்து உயிர்ப்பித்த வரம் தந்தாய்
மனக்குழப்பம் மாற்று எண்ணம்
தனித்திங்கே வாழும்போது
எங்கிருந்தோ கேட்ட ஒலி
தட்டி எழுப்பி தைரியம் தந்தது
எழுத த்தூண்டிது உணர்வு விழித்தது
ஓவியமாக இருந்த நிலைமை
காவியமாக வரைவதற்கு வந்தெம்மிடம்
காற்றின் மொழியாகி வாழ்வு தந்தாய்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading