” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்கு நீ
———-
என்வாழ்வின் பங்கு நீ
இடையில் விட்டுப் போனதென்ன
இருண்ட உலகில் வாழ்வது போல
மருண்டு விட்டேன் உனது பிரிவால்
பங்கு போட்டோம் எனது உனது என்று
இங்கு என்பங்கு இருக்கிறது
உம்பங்கையும் எனக்காய் விட்டுச் சென்றீரோ
இப்பூமியில் பிறந்து விட்டோம்
பூலோக வாழ்வில் அமிழ்ந்து விட்டோம்
பூமியின் பங்கு நீ அறிவாயா
நம்பங்குதான் நாம் அறிவோமா
பங்குச்சந்தையில் பணம் வாரிவழங்கி
பொங்கும் மகிழ்வுடன் முதலாய்க் குவித்து
தங்கிய இந்த குபேரவாழ்க்கை
எங்கும் எதிலும் மகிழ்ச்சி
அதன் பங்கு நீ தான்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
19.2.24

Nada Mohan
Author: Nada Mohan