” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
பெண்மையைப் போற்றுவோம்
————
மண்ணிலே பூத்த மலர்களும் மென்மை
மண்ணிலே பிறந்த பெண்களும் மேனமை
பெண்தான் நாட்டின் கண்கள் என்பர்
பெண்தான் வீட்டின் ஒளிதரும் குத்துவிளக்காம்
பண்பை விதைக்கும் பாற்குடம் இவள்
பணிவன்பைக் காட்டும் பொன்மிகு தாரகையிவள்
தேனாகச் சொரியும் தேன்தமிழ் பேச்சிவள்
மானாகத் துள்ளும் மருண்ட விழியவள்
சிந்தனையில் சிறந்த சிற்பி அவள்
எந்தையரைப் போற்றும் எழில்மிகு குணத்தவள்
ஆளுமை நிறைந்தவளும் அவள் தான்
ஆட்டிப் படைப்பவளும் அவள் தான்
வேதனை அனுபவிப்பவள் வேப்பிலைக் காரி
சாதனை படைக்கவே சக்தியாக நிற்பாளே
சோதனை வந்தாலும் துவளமாட்டாள்
சோர்ந்து முடங்கி கிடக்க மாட்டாள்
கல்வியிலே சிறப்பு காரியத்தில் முனைப்பு
கலையில் தென்றல் கலாச்சாரத்தில் வேட்கை
குடும்பத்தில் ஒற்றுமை சுமக்கும் சுமைதாங்கி
சமூகத்தில் இவள் ஒரு புதுமைப்பெண்
பெண்ணானவள் தாயாக, தாரமாக தங்கையாக அக்காவாக மகளாக
தாங்கிப் பிடிக்கும் அன்பெனும்
தூணாவாள்
இவ்வளவு மாண்புடைய பெண்களை போற்றுவோம்
பெண்மையை வாழ்த்துவோம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan