திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ மார்கழி “

மார்கழித் திங்கள் மகத்தான நன்னாள்
பூர்வீக மாக்கள் புனைவர் பாக்கள்
சோர்வின்றி விரதம் சோராது பிடித்தார்
சுறுசுறுப்பு உற்சாகம் சோம்பலைத் தவிர்த்திடும்

அதிகாலை திருவெம்பா அற்புதமாய்ப் பாடுவர்
அப்பன் சிவனிடம் அருள்வேண்டி வணங்கி
பதிகங்கள் தினம்தினம் பாடி மகிழ்வர்
பிள்ளையார் பெருங்கதை பாவைப் பாட்டெனவும்

இல்லங்கள் தோறும் எங்கும் மின்விளக்கு
இயேசுவின் ந்த்தார் இனித்திடக் கொண்டாடி
மங்காமல் வாழ்வு மலர வேண்டியே
மேன்மைகொள் தரிசனம் மேதினி எங்கும்…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading