நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

நிலாவின் உலா

மண்ணில் வாழ்ந்த மகிழ்வான தருணம்
எண்ணக் கருக்கள் எழிலாய் தவழுது
கண்ணாம் பூச்சி கட்டி தேடியது
கண்ணுக்குள் வருகுது காலத்தைக் கூறுது

நினைவில் வருகிறது நிலவில் உலாவியது
துணையாய் தோழிகள் நடையாய் நடந்து
சிவன்ராத் திரியிலே சேர்ந்த நடையில்
பவனி வருமே பக்குவமாய் நிலாவும்

உள்ளம் பொங்க உவகை அடைவோம்
கள்ளம் இல்லாமல் கடந்தது வாழ்வு
துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம்
அள்ளி நிலாவை அணைக்கத் தோன்றும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan