கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

நிலாவின் உலா

மண்ணில் வாழ்ந்த மகிழ்வான தருணம்
எண்ணக் கருக்கள் எழிலாய் தவழுது
கண்ணாம் பூச்சி கட்டி தேடியது
கண்ணுக்குள் வருகுது காலத்தைக் கூறுது

நினைவில் வருகிறது நிலவில் உலாவியது
துணையாய் தோழிகள் நடையாய் நடந்து
சிவன்ராத் திரியிலே சேர்ந்த நடையில்
பவனி வருமே பக்குவமாய் நிலாவும்

உள்ளம் பொங்க உவகை அடைவோம்
கள்ளம் இல்லாமல் கடந்தது வாழ்வு
துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம்
அள்ளி நிலாவை அணைக்கத் தோன்றும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading