மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 181
உன்னில் நான்

உன் வரவுக்குகாய்
காத்திருந்த காலம்போய்
என் வரவுக்குகாய்
காத்திருக்கின்றாய் நீ!

என்னை உன்னில் பார்த்தேன்
இனி உன்னை என்னில் பார்ப்பாய்
ஆசை எல்லாம் நீயாய் இருந்தாய்
இனி உன் ஆசை எல்லாம் நானாவேன்!

போகும் நாட்களில் நீ வளர்ந்து
பூ வாய் அழகு தந்தாய்
வரும் நாட்களில் நான் வளர்ந்து
நீ தாயாவாய்!

அழகியே உனக்கு அழகு சேர்க்க
இன்று உனக்கு வளகாப்பு
ஆசிர்வதிக்கின்றேன் அப்பாவாக
உன் அகத்தனில் நின்று!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading