மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தம்
வாரம் 194

மழை நீர்

தூறும் இந்த
தூறல் அந்த
சோகம் அன்றயதை
சொல்லாதோ !

வானம் கொட்டி
தீர்த்தயன்று
வழிகள் எல்லாம்
வழிந்த வெள்ளம்

சாலை குழிகள்
நிரவி. வெள்ளம்
ஆறு போல
ஓடும் நேரம்

ஓடும் எந்தன்
துவிச் சக்கரவண்டியும்
ஒற்றைக் கை
குடையும்

இடரி அந்த
குழியில் விழ
எதிரில் வந்த
பஸ் சாரதி
ஏங்கி பிரேக்
போட்டாரே!

காலன் அன்று
காவு காத்து
மோதி விழுந்து
நெளிந்த
துவி. சக்கரத்தோடு

மழையில்
மீண்டும் வீடு
போனேனே நடந்து !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading