க.குமரன்

சந்தம் சிந்தம்
வாரம் 194

மழை நீர்

தூறும் இந்த
தூறல் அந்த
சோகம் அன்றயதை
சொல்லாதோ !

வானம் கொட்டி
தீர்த்தயன்று
வழிகள் எல்லாம்
வழிந்த வெள்ளம்

சாலை குழிகள்
நிரவி. வெள்ளம்
ஆறு போல
ஓடும் நேரம்

ஓடும் எந்தன்
துவிச் சக்கரவண்டியும்
ஒற்றைக் கை
குடையும்

இடரி அந்த
குழியில் விழ
எதிரில் வந்த
பஸ் சாரதி
ஏங்கி பிரேக்
போட்டாரே!

காலன் அன்று
காவு காத்து
மோதி விழுந்து
நெளிந்த
துவி. சக்கரத்தோடு

மழையில்
மீண்டும் வீடு
போனேனே நடந்து !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading