க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 97
நவராத்திரி

வாணி உந்தன்
வீணை யேன
நானும் உந்தன்
மடியில் தங்குவேனோ !

மீட்டும் விரலின்
ஓசை நயம்
கேட்கும் சந்த
ஜதியின் சுரம்

காட்டும் அந்த
கலையின் வரம்
மாற்றும் எந்தன்
மனதின் லயம்

ஏங்கும் எனது
கலை தாகம்
ஏகமாக அரங்கேற
கலை வாணியே!
உந்தன் வரம்
வேண்டி!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading