க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 97
நவராத்திரி

வாணி உந்தன்
வீணை யேன
நானும் உந்தன்
மடியில் தங்குவேனோ !

மீட்டும் விரலின்
ஓசை நயம்
கேட்கும் சந்த
ஜதியின் சுரம்

காட்டும் அந்த
கலையின் வரம்
மாற்றும் எந்தன்
மனதின் லயம்

ஏங்கும் எனது
கலை தாகம்
ஏகமாக அரங்கேற
கலை வாணியே!
உந்தன் வரம்
வேண்டி!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading