” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

எண்ணத்தில் ஓசைகள்
வண்ணத்தில் கலவைகள்
சொற்களுள் புதையல்கள்
சொல்லாத புரிதல்கள்

விடியலின் இரகிசியம்
இரவுக்குத் தெரியாது
முடிவதின் அர்த்தங்கள்
முதலுக்குத் தெரியாது

கருமைக்குள் வெண்மை
கண்டவர் உண்டாமோ ?
துன்பத்தில் இன்பம்
தூய்த்தவர் உண்டாமோ ?

வானத்தில் ஆதவன்
வருவதைத் தடுத்திடலாமோ ?
வாழ்வினில் இன்பதுன்பங்கள்
வருவதை நிறுத்திடலாமோ ?

கிடைத்ததைக் கொண்டு
வாழ்க்கையை ரசிப்போம்
திருப்தியின் மகிழ்ச்சியை
உள்ளத்தில் விதைப்போம்

Nada Mohan
Author: Nada Mohan