” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கண்களை மூடிக் கொஞ்சம்
கனவுலகில் மிதந்து வர‌
நெஞ்சிலொரு ஆசையடி
நினைவுகளின் ஓசையடி

நேற்றைகளை மறந்து
நாளைகளைத்  துறந்து
இன்றைகளில் மகிழ‌
ஏங்குதடி இதயம்

எண்ணங்களின் சுமைகள்
பஞ்சாகிப் பறந்து விட‌
எஞ்சியுள்ள நினைவுகள்
தேனாகி இனித்துவிட‌

உருளுகின்ற உலகத்தில்
புரளுகின்ற நிகழ்வுகள்
துணையாக வேண்டுமென
‌கெஞ்சுதடி என் மனமே

வண்ணங்களின் துணையோடு
வானவில்லின் மீதேறி
வளைவான வழியூடு
விரைந்துவிட என்நெஞ்சம்
வீறு கொண்டு எழுகிறதே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan