சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

காலையிலே மலர்ந்தவொரு
கவிதையெந்தன் நெஞ்சிலே
கதிரவன் ஒளியதனில்
கதைபேசும் பொழுதிதுவே !

வந்தவழி தெரிந்திருந்தும்
போகுமிடம் புரியவில்லை
இருப்பதிங்கு கொஞ்சக்காலம்
இதயத்திலே சோகமில்லை

காட்சிகள் பலவுண்டு
சாட்சியாக ஞாபகங்கள்
மீட்சிதேடிப் பயணங்கள்
நீட்சி வாழும்காலம்தானே

நிஜங்கள் நிழலாகுவதும்
நிழல்கள் நிஜங்களாவதும்
நடப்பதுண்டு சமயங்களில்
நினைவிலாடும் நர்த்தனங்கள்

ஆனந்தமாய் வாழ்ந்துவிட்டால்
அன்பாக இருந்துவிட்டால்
அனைவருமே நண்பர்களே !
அனைத்துமே அனுகூலங்களே !

மேகங்கள் மறைப்பதினால்
ஆதவன் மடிவதில்லை
நேர்வழியெம் பாதையெனில்
வாழ்வினில் தோல்வியில்லை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading