நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சக்தி சக்திதாசன்

விழிப்பு வந்திட்டால்
சலிப்பு மறைந்திடும்
முழிப்பை மாற்றியே
செழிப்பை பெருக்கிடும்

விழிப்பின் வலிமையை
விளங்கிடும் வகையினில்
வளரும் தலைமுறையை
வளர்த்திட வேண்டும்

விழிப்பில் தொடங்கும்
வளமான பொழுதுகள்
பொலிப்புடன் நாளினைக்
கழித்திடும் வழியது

விழிப்பின் எல்லைகளை
வகுப்பவர் யாரிங்கு
அழிப்பின் ஆற்றலை
அகற்றிடும் வேளைகள்

விழிப்பினை இழந்ததால்
வலித்தவன் சொல்கிறேன்
விழிப்பினை மறந்தால்
வாழ்க்கையில் வலிகளே !

விழிப்புடன் செயலாற்றுங்கள்
வாழ்க்கையில் என்றுமே
செழித்திடும் வாழ்க்கையே !
செந்தமிழ்ச் சொந்தங்களே

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan