பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு274
விருப்பத்தலைப்பு
.

இன்று யோகேஸ் அண்ணாவின் 35 வது நினைவு தினமாகும்

அவருடன் சேர்ந்து உயிர்நீத்த தலைவர் அண்ணன் அமரர் அமிர்தலிங்கம் , காயமடைந்த அண்ணன் அமரர் சிவசிதம்பரம் ஆகியோரையும், இச்சமயம் நினைவுகூர்வது
நினைவுகள் சுடுகின்றன
நெஞ்சினில் அனலாக
அன்னைத் தமிழின்
அருமை மைந்தனே !

மானிடராய்ப் பிறந்தோம்
மானிடராய் வளர்ந்தோம்
மானிடராய் வாழ்ந்தோமா ?
மனதினைக் கேட்போம்

கிடைத்த வாழ்வினைத்
தனக்காய் வாழாமல்
தனையீந்த சமூகத்திற்காய்
தனையீந்த தனயனே

அன்னையின் அக்காவின்
அருமை மைந்தனாய்
அன்புமிகு அண்ணனாய்
அண்ணன் யோகேஸ்

அகவைகள் மூபத்தோடு
ஓரைந்து ஓடிற்று
விதையாக விழுந்து
விருட்சமான அண்ணாவே !

நினைவுதினத்தில் உம்மை
நினைப்பதன்றி வேறென்ன
செய்திடமுடியும் மண்ணில்
செய்கிறேன் ஆத்மாஞ்சலி

அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன் ( தாஸ் )

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading