30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு274
விருப்பத்தலைப்பு
.
இன்று யோகேஸ் அண்ணாவின் 35 வது நினைவு தினமாகும்
அவருடன் சேர்ந்து உயிர்நீத்த தலைவர் அண்ணன் அமரர் அமிர்தலிங்கம் , காயமடைந்த அண்ணன் அமரர் சிவசிதம்பரம் ஆகியோரையும், இச்சமயம் நினைவுகூர்வது
நினைவுகள் சுடுகின்றன
நெஞ்சினில் அனலாக
அன்னைத் தமிழின்
அருமை மைந்தனே !
மானிடராய்ப் பிறந்தோம்
மானிடராய் வளர்ந்தோம்
மானிடராய் வாழ்ந்தோமா ?
மனதினைக் கேட்போம்
கிடைத்த வாழ்வினைத்
தனக்காய் வாழாமல்
தனையீந்த சமூகத்திற்காய்
தனையீந்த தனயனே
அன்னையின் அக்காவின்
அருமை மைந்தனாய்
அன்புமிகு அண்ணனாய்
அண்ணன் யோகேஸ்
அகவைகள் மூபத்தோடு
ஓரைந்து ஓடிற்று
விதையாக விழுந்து
விருட்சமான அண்ணாவே !
நினைவுதினத்தில் உம்மை
நினைப்பதன்றி வேறென்ன
செய்திடமுடியும் மண்ணில்
செய்கிறேன் ஆத்மாஞ்சலி
அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன் ( தாஸ் )
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...