28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு274
விருப்பத்தலைப்பு
.
இன்று யோகேஸ் அண்ணாவின் 35 வது நினைவு தினமாகும்
அவருடன் சேர்ந்து உயிர்நீத்த தலைவர் அண்ணன் அமரர் அமிர்தலிங்கம் , காயமடைந்த அண்ணன் அமரர் சிவசிதம்பரம் ஆகியோரையும், இச்சமயம் நினைவுகூர்வது
நினைவுகள் சுடுகின்றன
நெஞ்சினில் அனலாக
அன்னைத் தமிழின்
அருமை மைந்தனே !
மானிடராய்ப் பிறந்தோம்
மானிடராய் வளர்ந்தோம்
மானிடராய் வாழ்ந்தோமா ?
மனதினைக் கேட்போம்
கிடைத்த வாழ்வினைத்
தனக்காய் வாழாமல்
தனையீந்த சமூகத்திற்காய்
தனையீந்த தனயனே
அன்னையின் அக்காவின்
அருமை மைந்தனாய்
அன்புமிகு அண்ணனாய்
அண்ணன் யோகேஸ்
அகவைகள் மூபத்தோடு
ஓரைந்து ஓடிற்று
விதையாக விழுந்து
விருட்சமான அண்ணாவே !
நினைவுதினத்தில் உம்மை
நினைப்பதன்றி வேறென்ன
செய்திடமுடியும் மண்ணில்
செய்கிறேன் ஆத்மாஞ்சலி
அஞ்சலிகளுடன்
சக்தி சக்திதாசன் ( தாஸ் )
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...