” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
283
அழகு.
அருவி
அது ஓடும் அந்த
அற்புத ஓசை
என் மனதினில்
ஆடும்

அலைகள்
அதன் ருத்ர தாண்டவம்
ஆர்ப்பரிக்கும்
ரீங்கார ஓசை
நினைவுகளைத்
தாலாட்டும்

மழையாகும்
அந்தக் கார்மேகக் கூட்டம்
மறையாத குளிர்மை
கொண்டே
என்நெஞ்சில்
உறையும்

மலையின் முடியுடன்
விளையாடும் வெண்மேகம்
உறவுக்கு வரைவிலக்கணம்
உறுதியாய்
உரைத்திடும்

வண்ணத்திரையாம்
அந்த வானிலே
மின்னும் நட்சத்திர
தோரணங்கள்
நீங்காத நிம்மதியைத்
தோற்றுவிக்கும்

இரவின் இருளுக்கு
இளமை கொடுக்கும்
வண்ணவிளக்காம்
வெண்ணிலவின் சுகராகம்
என்னெஞ்சை
ஊஞ்சலாட்டும்

கவிதைத் தலைமகன்
கவியரசன்
கண்ணதாசன்எண்ணத்தின்
வழிநின்று
என்றும் நான்
தமிழ் எனும்
அந்த தலையாணியில்
மெத்தென விழுவேன்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan