” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
பிரிவுத்துயர்!
காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழின் பெருமை மணம் வீச
ஊற்றாக நதியாக கடலாகிய
போற்றுதலுக்குரிய பெருமங்ககையே!
பெண்ணியம் பற்றி
மண்ணிலே முழங்கி
கவிகளும் கதைகளும் காவக்
குவிந்த பாராட்டுகளில் திளைத்து
பவித்திரமாய் பலமேடைகளில்
பேசிய நீவிர்
விதிவிட்ட கோட்டுவழி
விடுதலையாகிப் போனீரோ?
வள்ளுவன் உரைத்த
குறள்வழி புகழொடு தோன்றி மறைந்தீரோ? பள்ளிகள் எல்லாம்
பைந்தமிழ் வளர்த்தீர்
பிள்ளைகள் போலே மாணவச் செல்வங்களை
பாசமுடன் அரவணைத்தீர்
தாகம் கொண்டார் சைவமும் தமிழும் வளர்க்க
பாகம் ஆனீர் பாமுகப் பந்தலில்
வாயார வாழ்த்திடுவீர்
தாயாக வாழ்ந்திட்டீர்
கன்னல் சுவையொடு பேசி
பின்னிப்பிணைந்து நீவிர்
முகம் தெரியா உறவாகி
அகம் நிறைந்து வாழ்கிறீர்!
நித்தமும் ஒலிக்கும் குரல் நினைவலைகளில்
நீண்டு கொண்டே இருக்கும்!
ஓம் சாந்தி!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan