“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
பிரிவுத்துயர்!
காற்று வீசும் திசைகளெல்லாம்
தமிழின் பெருமை மணம் வீச
ஊற்றாக நதியாக கடலாகிய
போற்றுதலுக்குரிய பெருமங்ககையே!
பெண்ணியம் பற்றி
மண்ணிலே முழங்கி
கவிகளும் கதைகளும் காவக்
குவிந்த பாராட்டுகளில் திளைத்து
பவித்திரமாய் பலமேடைகளில்
பேசிய நீவிர்
விதிவிட்ட கோட்டுவழி
விடுதலையாகிப் போனீரோ?
வள்ளுவன் உரைத்த
குறள்வழி புகழொடு தோன்றி மறைந்தீரோ? பள்ளிகள் எல்லாம்
பைந்தமிழ் வளர்த்தீர்
பிள்ளைகள் போலே மாணவச் செல்வங்களை
பாசமுடன் அரவணைத்தீர்
தாகம் கொண்டார் சைவமும் தமிழும் வளர்க்க
பாகம் ஆனீர் பாமுகப் பந்தலில்
வாயார வாழ்த்திடுவீர்
தாயாக வாழ்ந்திட்டீர்
கன்னல் சுவையொடு பேசி
பின்னிப்பிணைந்து நீவிர்
முகம் தெரியா உறவாகி
அகம் நிறைந்து வாழ்கிறீர்!
நித்தமும் ஒலிக்கும் குரல் நினைவலைகளில்
நீண்டு கொண்டே இருக்கும்!
ஓம் சாந்தி!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading