” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம் !
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு
மனசுக்குள் மத்தாப்பு!

ஆடியில சேதிசொல்லி ஆவணியில் தேதிவைச்சு
கூடிமகிழப் போகிறோம கோடிஇன்பம் கண்டிடலாம்!
தினம் உன்னைச் சுமப்பதால் கனக்கிறது மனசும்தான்
பிரசவவேதனைப்படுகிறேன மான்குட்டியே உனைஅணைக்க
காத்திருக்கேன் அந்தநாள் கண்மணியே எப்பதான் வந்திடுமோ
சாத்திடுவேன் பூமாலை சாமியென உன்கழுத்தில்
மணமகளாய் வந்திடுவாய் மனையறம் காத்திடுவோம்
மனசுக்குள்ள வெடிக்குதடி மத்தாப்பு அறிவியோ?

திரு.சக்தி சக்திதாசன் அவர்களே மிகுந்த நன்றி!
திருமதி.வஜிதா முகமட் அவர்களே மிகுந்த நன்றி!
இருவரும் சேர்ந்து ஆற்றும் பணி போற்றுதற்குரியது. பாராட்டுகள்!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் பெருநன்றி!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan