” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு: பெண்மையைப் போற்றுவோம்
*****************
(சிற்றிலக்கியம்)
1. தாரணி தன்னிலே தாயென வந்தவள்
வீரம் நிறைந்தவள் வீச்சு!
2.வீச்சுடன் வேங்கையாய் வீறு நடையுடையாள்
பேச்சிலும் மூச்சிலும் பெண்!
3.பெண்கள் உலகிலே கண்களும் ஆவாரே
மண்ணிலே மாந்தரில் மாண்பு!
4.மாண்புடைத் தெய்வம் மனத்தில் இருத்துவாய்
ஆண்களே!ஆரணங்கு மேல்!
5.மேன்மையும் கொண்டவள் மேதினியில் பூவிலும்
மென்மை அவளே அறி!
6.அறிவில் சிகரமாய் ஆளுமை கொண்டே
குறியது நோக்கிடும் குன்று!
7.குன்றிலே ஏற்றிக் குடும்பமாய்ப் போற்றவே
என்றும் மகிழ்வாளே ஏத்து!
8.ஏத்தியே வாழ்வாயே ஏந்திழையாள் உன்றனின்
ஆத்தாள்அறிந்தே உணர்!
9.உணர்வில் உருக்கம் உடையாளை எல்லாக்
கணமும் நினைப்பாய் கனிந்து !
10.கனிவுடன் வாழ்ந்து கடமைகள் செய்வாள்
நனிவுடன் போற்றுதல் நன்று!
நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan