திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்!

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
நினைவுநாள்!

தேசத்தை நேசித்த நெஞ்சங்களாய்
பாசத்தைத் துறந்து
எண்ணற்ற கனவுகளோடு
களம் புகுந்து
எங்கள் நெஞ்சத்து நினைவோடு ஒன்றானீர்!
செந்நீரால் எங்கள் தமிழ்மண்ணைக் கழுவி
வெந்தணல் வேகிய வேங்கைகள்
சரித்திரம் படைத்த சாதனைச் சிகரங்கள்
கரிகாலன் வழியில் கவியமானவர்கள்
உரிமைக்காகப் போராடிய உத்தமர்கள்
எரிகின்ற தீயில் ஆகுதியானவர்கள் !
மனங்களில் நின்று நிலைத்துக்
கனத்த மாதமாய் கார்த்திகை
மண்மீட்கப் புறப்பட்ட மாவீரர்களே
கண்ணீர்ப் பூக்களால்
உங்கள் ஆன்மாவை வருடுகிறேன்!

வீர அஞ்சலி செலுத்தி
விடைபெறுகிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading