28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2025
மாற்றம் என்பது உலக நியதி,
மாறாமல் நிலைப்பது சக்தி
பக்தியாய் வேண்டி நின்று
பராசக்தி அருள் பெற்று
உள்ளத்தொளிரும் விளக்காய்
ஊக்கம் தந்திடும் ஒளியாய்
உன்னுள் சக்தியை இருத்தி
உலகு முழுதும் தேடாமல்
என்னால் முடியுமெனும் வார்த்தை
ஏணிப்படியாய்க் கோர்த்து
விதைக்குள் உறங்கும் மரம் போல,
உனக்குள் உறங்கும் சக்தி கண்டு
விண்ணைத் தொட்டு நீ
வெற்றிக்கு வழி வகுத்து
அன்னை பராசக்தியின் ஒளியாய்
அகிலத்தையும் காப்பாயே,…..
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.