” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி 86

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2025

மாற்றம் என்பது உலக நியதி,
மாறாமல் நிலைப்பது சக்தி
பக்தியாய் வேண்டி நின்று
பராசக்தி அருள் பெற்று

உள்ளத்தொளிரும் விளக்காய்
ஊக்கம் தந்திடும் ஒளியாய்
உன்னுள் சக்தியை இருத்தி
உலகு முழுதும் தேடாமல்

என்னால் முடியுமெனும் வார்த்தை
ஏணிப்படியாய்க் கோர்த்து
விதைக்குள் உறங்கும் மரம் போல,
உனக்குள் உறங்கும் சக்தி கண்டு

விண்ணைத் தொட்டு நீ
வெற்றிக்கு வழி வகுத்து
அன்னை பராசக்தியின் ஒளியாய்
அகிலத்தையும் காப்பாயே,…..

Jeba Sri
Author: Jeba Sri