மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி பாசிமணி பவளமணி பற்றுடனும் கோர்த்து பாடிப்பாடி கூவியுமே விற்றிடுவர் அம்மே ஊசியுடன் நூலாக உறவுடனும் கூடி ஊர்ஊராய் நட்புடனும் உலாவருவர் அம்மே பச்சைக்குத்தி பக்குவமாய் பணிசெய்வர் அன்பாய் பாரெங்கும் ஜோதிடத்தில் குறிசொல்வர் அம்மே இச்சைதனை இறந்தாலும் ஏற்றிடாத உள்ளம் இன்பத்தில் துன்பத்தில் உயர்நெறியே அம்மே மாடிவீடு வாழ்ந்ததில்லை மாளிகையாய் உள்ளம் மாசற்ற குடிசையிலே மகிழ்ந்திடுவர் அம்மே பாடிடுவர் ஆண்சாதி பெண்சாதி என்றே பள்ளிப்பாடம் தராததை தந்திடுவர் அம்மே கோடியிலே புரண்டாலும் கொள்கைதனை மாற்றாத கோமகனின் வம்சம் எங்கள் குறவஞ்சி அம்மே 🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு குற்றால குறவஞ்சி

பாசிமணி பவளமணி பற்றுடனும் கோர்த்து பாடிப்பாடி கூவியுமே
விற்றிடுவர் அம்மே

ஊசியுடன் நூலாக உறவுடனும் கூடி
ஊர்ஊராய் நட்புடனும் உலாவருவர் அம்மே

பச்சைக்குத்தி
பக்குவமாய்
பணிசெய்வர் அன்பாய் பாரெங்கும் ஜோதிடத்தில்
குறிசொல்வர் அம்மே

இச்சைதனை இறந்தாலும் ஏற்றிடாத உள்ளம்
இன்பத்தில் துன்பத்தில் உயர்நெறியே அம்மே

மாடிவீடு வாழ்ந்ததில்லை மாளிகையாய் உள்ளம் மாசற்ற குடிசையிலே மகிழ்ந்திடுவர் அம்மே

பாடிடுவர் ஆண்சாதி பெண்சாதி என்றே பள்ளிப்பாடம் தராததை தந்திடுவர் அம்மே

கோடியிலே புரண்டாலும்
கொள்கைதனை
மாற்றாத
கோமகனின் வம்சம் எங்கள் குறவஞ்சி அம்மே

🙏🏻🙏🏻நன்றி வணக்கம்🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading