” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சமன்பாடா முரண்பாடா….

வாழ்வெனும் கற்கோயில் வார்ப்பாக்கும்
வரைமுறையின் எழில்கோலம் உராய்ந்து கொள்ளும்
பாத்திரத்தில் உருவெடுப்பில் படி அமைத்து
பாரிற்குள் உயிர்ப்பெழுதும் சான்றின் கல்லே
உலகத்தின் தாரசிற்குள் இருதட்டாய்
இருபாலர் வாழ்விற்குள் உராய்வெட்டாய்
தாய்மைக்குள் பெண்மையை தரிக்க வைத்தாய்
தரணிக்குள் உறவெழுத உயிர்ப்புத் தந்தாய்
உறவுமுறை யாப்பிற்குள் பற்பலதாய்
உடமைகொள் சிறப்பிற்குள் முகவரியாய்
துணையெனும் தூண்டில் விளக்காகி
துரிதத்தில் வாழ்க்கைக்கு வரம்பமைப்பாள்
கல்லுளியால் வார்ப்பெழுதும் சித்திரம் போல்
கடைமைகளை செப்பனுற வார்த்தெழுதும்
வார்ப்பில்லா வரைமுறையில் சிறகடிக்கும் வாழ்வெனும் ஒடத்தின்
சூத்திரங்கள் சமன்பாடா? முரண்பாடா?
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan