நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சரளா தரன்

சந்தம் சிந்தும் சந்திப்பு.
“விழிப்பு”

கண்னே
காதலியே
உன்னால் நான் விழிப்பு
உறக்கம் இன்றி விழிப்பு

உன்னோடு உரையாட விழிப்பு
உன் குரலை
உறங்க முன் கேட்க விழிப்பு

கண்ணால் கதை பேசி
கண் சிமிட்டும் காதலியே
கரு விழியும்
கர்னன் வில் புருவமும்
தெருவில் குனிந்த தலையும்
தேகம் எங்கும் என் நினைப்புமாய்
பக்குவம் கொண்ட
பத்தினிக்காய் நான் விழிப்பு

விடியல் உன் குரலால் விழிப்பு
விடிந்தோடும் நாட்கள்
உன்னால் விழிப்பு
உன் முகம் காண
உறக்கம் இன்றி நான் விழிப்பு

கருவை நீ சுமந்ததால்
கவலை ஏதுமின்றி
நமக்காய் …
நம் உறவுக்காய்-விழிப்பு

பிறப்புக்களின் உயர்வுக்காய்
பிரியமானவளே நீ விழிப்பு
உன் அன்புக்காய்
என்னவளே நான்
விடிய விடிய விழிப்பு
இதுவும் ஒரு வகை விழிப்பு
சரளா தரன்

Nada Mohan
Author: Nada Mohan