” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

-சரளா தரன்-

சாந்தம் சிந்தும் சந்திப்பு 263 “அழகு “
என் ஊர் அழகு
ஒற்றை திருக்கை வன்டியும்-அதில்
இரட்டைப் பிள்ளைகளும்
முச் சந்தியில் நின்று முனுமுனுப்பும்
கச்சை கட்டிய அப்புவும்
கடைக்கண் பார்வையில்
கல்சட்டைப் பெடியளும்
பந்து திரத்த பத்து வயசில்
பிஞ்ச கால் சட்டையை
பிஞ்சுக் கையால் இழுத்தபடி
பஞ்சாய் பறக்கும் பொடியளும்
ஊர் கோவிலும்
ஊட்டிவிட்ட கைகளும்
ஊரவர் மத்தியில்
உருண்டு ஓடிய திருவிழாவும்
மண்வெட்டியும் மரக்கொத்தும்
மஞ்சள் வானம் காணும்-அந்த
வயல் வெளிகளும்
கொஞ்சி குலாவும்
பஞ்சவர்ண கிளிகளும்
நெஞ்சில் நினைக்கையில்
என் ஊர் அழகு
-சரளா தரன்-

Nada Mohan
Author: Nada Mohan