” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பணம்
&&&&&&

பணமிருக்கு பணமிருக்கு வந்திடுங்கள் சாமி

குணமுமில்லை மணமுமில்லை கேட்டிடுங்கள் சாமி
பத்தும் செய்யும் பாரினிலெ பார்த்துக்கோடா சாமி

பத்தும் மறக்கும் பாசம் துறக்கும் பண்பும் பறக்கும் சாமி

எத்தன் கையில் சிக்கியபணம் எங்கிருக்கு சாமி
பித்தன் கைக்கு கிட்டாமல் அவனைப் பாடாய்படுத்துதே சாமி

வித்தைகாட்டும் மனிதன் முன்னே வேடிக்கையான பணமே
கத்தையாக நோட்டை வைத்து ஏங்குவார் பலர்கோடி

நாணயமான நாணயத்தை நாகாக்க செய்வாரில்லை

கூழும்கஞ்சியும் குடிப்பாரிடத்தே கொடுப்பார் யாருமில்லை

அடுக்கு மாடிக்கட்டிடங்கள் அழகாய் எழும்பும் சாமி

சுடக்குப் போட்டு நின்றுகொண்டே பேசும் திமிரைக்கேளு

கடக்குமாசை கொண்டு நின்றே அழிந்துபோவதைப் பாரு

கடமைநெறியைத் தவறியவர்க்கு பணமும் என்ன பணமோ

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan