” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பெருமை
^^^^^^^^^^^^^^

பொறுமை என்பது செயலின் பெருமை
சிறுமை இன்றியே நடப்பதே அதன் மகிமை

வறுமை வந்தாலும் வரம்பு மீறாதது திறமை

முறமை இன்றியே அறம் காப்பது புதுமை

கனிந்த நல்மனதினிலே கருணையின் பிறப்பும்

இனித்திடும் நிலையிலே இன்பத்தின் உயிர்ப்பும்

தனித்துவம் சிறந்திட தன்மானத்தின் செழிப்பும்

மானிலமே போற்றி நிற்க மங்காத பெருமை கொள்வாய்

சீறாதே சினக்காதே சிதறியும் நடைபயிலாதே

வெறுக்காதே ஒதுக்காதே வெற்றியோடு நடைபோடு

மாறாதே மறுக்காதே மாண்பு கொண்ட பாதையைநீ

தூற்றாதே துவைக்காதே தூய்மையான அன்பினையும்

இத்தனையும் வேண்டும் அத்தனையும் பெருமையாகும்

பற்றிவிட்ட கொள்கையிலும் பக்திநெறி தளைத்தோங்கும்

வித்திட்ட முளைதானே துளிர்விட்ட பெரும் விருட்சம்

அத்தனையும் அடைந்திருந்தால் அறமோங்கப் பெருமைசேரும்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan