” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

விழிப்பு
^^^^^^^^^^^

வியக்கும் வண்ணம் விளிப்பாய் விழிப்புடன்
பயக்கும் படியே பணிந்தே விழிப்பாய்
களிக்கும் இன்பம் கனிந்துமே கொள்ள
பழிப்புக்கள் இன்றியே விழிப்பாய் நன்றே

உணர்வு கொண்ட எண்ணமதிலே
ஊழல் இல்லாத கொள்கைதனிலே
உத்தம குணத்தை உதாரணமாக்கி
உயர்வும் அடைய விழிப்பாய் நன்றே

வாழ்விலே எத்தனையோ போராட்டம் வருமே
வஞ்சகச் சூழ்ச்சிகள் வலிந்தே வருமே
விஞ்சிடும் நிலைக்கு விளைவுகள் நேருமே
துஞ்சிடும் நிலையின்றி விழிப்டாய் நன்றே

இனியும் கவலை எமக்கு இல்லை
இகமதில் இங்கிதம் தெரிந்தும் கொண்டே
இகழ்வுகள் அற்ற விழிப்புகள் வேண்டும்
இடுக்கண் அகன்றிட விழிப்பாய் நன்றே

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan