சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

நகுலா சிவநாதன்

சாரல் மழையும் சாதிக்கத் துடிக்கிறது

சாரல் மழையும் சாதிக்க துடிக்கும்
சாதனை அதற்குள் வந்துவிட்டால்
சோதனை செய்து தொழில்பட முனையும்
சொர்கமும் காணும் சொந்தமும் தேடும்

முயற்சி யென்ற முனைப்புக்குள்
முந்தும் செயலும் விந்தை புரியும்
சிந்தும் வரமாய் சிறகுக்குள்ளே
சந்தம் வருமே சாதிப்பும் நிகழும்

பந்தம் தொடரும் வாழ்வும் இங்கே
பயனும் அளிக்கும் படிப்பும் நல்கும்
வெந்த புண்ணில் வேலும் பாச்சும்
சொந்த அறிவு மங்கி விட்டால்…….

நகுலா சிவநாதன் 1824

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading