திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சாரளத்தின் ஓளியில்

நேவிஸ் பிலிப் கவி இல(147) 19 /09/24

பேருலகின் உட் செல்ல
எனக்காகான வாசல்
என்வீட்டு சாரளம்

வைகறை விடியலிலே
எழுகின்ற கதிரவனின்
மிதமாய் பரவும்
பொன் ஒளிக் கீற்றும்

நறுமணம் வீசிட
இதமாய் உடல் வருடும்
இளம் தென்றல் காற்றும்
பதமாய் தங்கிடுமே என்னறையில்

பரந்து விரிந்த பசுமை
பாடும் பறவைக் கூட்டம்
காலை நேரக் காட்சிகள்
பொன் வண்ணக் கதிரொளியில்

வெண்ணிலா முழுமதியாய்
தண்ணொளி பரப்பிடவே
நட்சத்திர தோழிகளும்
பவனி வரும் கண் கொள்ளா காட்சி
இரசிக்கின்றேன் சாரளத்தின் வழியே.

நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading