சின்ன வயதினிலே

சின்ன வயதினிலே
சிறகுகள் முழைத்த
சிட்டுக் குருவியாய்
சிரித்து மகிழ்ந்தோம்.

வளைந்த தெருவெல்லாம்
வானவில்லும் கைவசமென
வண்ணக் கனவுடன்
வலம் வந்தோம்

உறவுகளும் நண்பர்களாய்
உருண்டோடிய காலம்
தோள் கொடுக்கும் தோழர்களும்
துக்கம் காணாக் காலமது.

யுத்த காலம் மொத்தமாய் வர
யோகம் இழந்து துயராய் சேர
நெஞ்சம் நிறைந்த பாரமது
நேசத்தை தொலைத்த சின்ன வயதுக் காலமுமிதுவே.

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading