சின்ன வயதினிலே

சின்ன வயதினிலே
சிறகுகள் முழைத்த
சிட்டுக் குருவியாய்
சிரித்து மகிழ்ந்தோம்.

வளைந்த தெருவெல்லாம்
வானவில்லும் கைவசமென
வண்ணக் கனவுடன்
வலம் வந்தோம்

உறவுகளும் நண்பர்களாய்
உருண்டோடிய காலம்
தோள் கொடுக்கும் தோழர்களும்
துக்கம் காணாக் காலமது.

யுத்த காலம் மொத்தமாய் வர
யோகம் இழந்து துயராய் சேர
நெஞ்சம் நிறைந்த பாரமது
நேசத்தை தொலைத்த சின்ன வயதுக் காலமுமிதுவே.

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading