இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

சின்ன வயதில்

ராணி சம்பந்தர்

சின்ன வயதில் சீர் வரிசை
பென்னம் பெரிய பிணைப்பு
முன்னம் செய்த அருட்கொடை

அன்னமூட்டித் தானுண்ட தந்தை
கன்னம் நோகுமெனக் கண்ணுக்குக்
கண்ணாக அரவணைத்த அன்னை

சின்னக்குட்டி செல்லக்குட்டி எனத்
தூக்கிச் சீவிச் சிங்காரித்து நெற்றிப்
பொட்டும் விதம் விதமான உடுப்பும்

போட்டு அழகுபார்த்த அக்காமார்
இன்னுமென்னென்ன வேண்டுமோ
சொன்னவுடன் தோளில் சுமந்து

தென்னங்குரும்பையில் தேர் செய்து
ரயர் உருட்டி எங்கள் வீட்டு மகாராணி
எனத் தூக்கிச் சென்று விளையாடிய
அண்ணாமாரும் சின்ன வயதில்
எனக்குக் கிடைத்த பேரானந்தமே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading