சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1799!

நாட்டு நடப்பு!

வீட்டு வாடகை
உயர்வோ துயரு
விழுந்தடித்து வேலை
செய்தும் தொலைந்து
போகுதே இருப்பு!

இருப்பதைப் பகிர
இல்லையே மனது
இங்கே நாட்டுக்கு
நாடு இதுவே பிழைப்பு!

பொருளின் விலை
மலையென ஏற
மிச்சப் பிடிப்பில்
எஞ்சியது ஏதுமில்லை!

கடுகதி உணவும்
கரையும் காலமும்
தொலைவில் உறவும்
தொடர்கதை ஆனது!
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading