நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1943..

அடுத்து தொடுத்து..
அடுத்து தொடுத்து
அலையலையாய் எழும்
எத்தனை நிகழ்வுகள்
பாமுகப் பந்தலில்
அழகியல் சிலதாய்
அறிவியல் பலதாய்
ஆளுமை ஊற்றாய்
அகத்தின் சாரலாய்
இணைகிற பொழுதினில்
இயக்கமும் தொடருதே..

சிவனுக்கு இராத்திரியும்
சிறந்த கவியோட்டத்தின்
இராணியாய் எங்கள்
கோசல்யா நினைவுடனும்
எழுச்சிப் பெண்ணின
முன் மாதிரியும் மெல்ல
மரபினில் நூறுமாய்த்
தொடரும் தொடுப்புகள்
தொடட்டும் உச்சமே…!
சிவதர்சனி இராகவன்
6/3/2024

Nada Mohan
Author: Nada Mohan