” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1795!
சித்திரை வந்தாலே!

சித்திரையில் புத்திரன்
பிறப்பது சிறப்பல்ல
என்ற பழமை மொழி- மாறி
சித்திரையில் பிறந்தால்
முத்திரை பதிப்பர்
என்றவொரு புது அல்ல
பொது மொழி தோன்றலாச்சு!

சித்திரைப் புத்தாண்டின்
சீரிய நினைவுகளும்
சிந்தைக்குள் நின்றாடும் நினைவுகளின்
நிழல்களும் மகிழ்வூட்டும்!

இயற்கையின் அழகும்
இறைத்த வாழ்வின்
நம்பிக்கை வரங்களும்
விழிப்பின் நிகழ்வுகளும்
நம்பிக்கை ஒளியென
நம்மை வழிப்படுத்தும்!!
சிவதர்சனி இராகவன்
13/4/2023

Nada Mohan
Author: Nada Mohan