மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1670!
பசி

குறும்படம் சுருக்கெனத் தைத்தது மனத்தில்
உணர்த்திய பாடமோ அரியது மண்ணில்
கொடியது பசியெனும் கொடுமை
கண்டீர்
ஆற்றிட முடியாத ஆற்றாமை கொண்டார்!

பெற்ற பிள்ளை பசியால் வாடப்
பொறுக்குமோ பெற்றவர் மனமும்
களவாடும் பொழுதினில் கையும்
மெய்யுமாய்
அகப்பட்ட அந்த மனிதன் பரிதவிப்பு!

அறிந்தும் அறியாதவராய் ஆங்கே
இருவர்
ஆன்ம நேயம் கொண்டே செயல்படவே
இன்னும் மிச்சம் மீதி ஒட்டியே தர்மம்
வாழுது மண்ணில் போதுமே இறைவா!

பசியென்று வந்தால் இரங்கும் தருணம்
இமைக்கு முன்னே பசியாற்றும் கருணை
வரமாய்த் தருவாய் வளமாய்த் தருவாய்
பசியிலா உலகினைப் பண்புடன்
நெய்வோம்!
சிவதர்சனி இராகவன்
10/8/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading