” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1690!
பன்மொழி பகர்வோம்!

கற்கை நன்றே காலங் கடந்தும்
பெற்றிடும் பயனே ஊற்றென பெருகும்
மொழியின் வேரும் மொழிந்திடும் பேறும்
விழியென வாழ்வில் ஒளியினைச் சேர்க்கும்!

ஆளுமைத் தேடலில் ஆற்றலின் நீட்டலில்
தோழமை கொள்ளும் பந்மொழி
புலமை
படைப்பினைக் கூட்டும் பக்குவம் ஆக்கும்
மதிப்பினை ஈயும் மாண்புற ஏற்றும்!

தாய்மொழி தரமிக்கதாய் மின்னும்
தனித்தே நம்மை புடமிட்டுக் காட்டும்
வாழ்விட மொழி வளங்களைக் கூட்டும்
வண்ணமாய் வாழ்வியல் கொஞ்சும்!

முயற்சியெனும் ஆயுதம் முன்னே செல்ல
முப்பொழுதும் அதன்வழி அறிவு தள்ள
அகப்படும் நொடிகள் துடுப்பென மாற
வசப்படும் பன்மொழி பல்திறன் நம்மிடம்!
சிவதர்சனி இராகவன்
15/9/2022

Nada Mohan
Author: Nada Mohan