மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1697!

உழைப்பே உரமாகும்!
உழைப்பே வாழ்வினுக்கு உரமாகும்
உயர்ந்திடத் தரமான வரமாகும்
விடியலில் ஆரம்பம் கண்டே மெல்ல
விரைந்திடும் பொழுதுகள் துணை ஆகும்!

உறுதியாகும் கரங்களும் சேர்ந்து
உணர்வினுக்கு துணை சேர்க்கும்
வரவும் மிஞ்சிய செலவுமிங்கே
வாழ்வியல் சவாலாய் விஞ்சி நிற்கும்!

நாளை எனும் எதிர்காலம் முன்னே
நாம் என்றும் தோற்றிடல் வேண்டா
கோழை என்றே சோம்பிக் கிடக்க
வேளை அல்ல இது வாழ்வின் தேவை!

நிறைவான செல்வம் மகிழ்வே என்றும்
போதும் எனும் நிலை கண்டாலே
ஓய்வு கேட்கும் உடலை ஆற்றி
நோயின்றி வாழ்தல் சிறப்பே ஆகும்!
சிவதர்சனி இராகவன்
29/9/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading