சிவதர்சனி

வியாழன் கவி 1697!

உழைப்பே உரமாகும்!
உழைப்பே வாழ்வினுக்கு உரமாகும்
உயர்ந்திடத் தரமான வரமாகும்
விடியலில் ஆரம்பம் கண்டே மெல்ல
விரைந்திடும் பொழுதுகள் துணை ஆகும்!

உறுதியாகும் கரங்களும் சேர்ந்து
உணர்வினுக்கு துணை சேர்க்கும்
வரவும் மிஞ்சிய செலவுமிங்கே
வாழ்வியல் சவாலாய் விஞ்சி நிற்கும்!

நாளை எனும் எதிர்காலம் முன்னே
நாம் என்றும் தோற்றிடல் வேண்டா
கோழை என்றே சோம்பிக் கிடக்க
வேளை அல்ல இது வாழ்வின் தேவை!

நிறைவான செல்வம் மகிழ்வே என்றும்
போதும் எனும் நிலை கண்டாலே
ஓய்வு கேட்கும் உடலை ஆற்றி
நோயின்றி வாழ்தல் சிறப்பே ஆகும்!
சிவதர்சனி இராகவன்
29/9/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading