04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
வியாழன் கவி -2338
“சிவந்த மே”
ஆண்டுகள் பத்தொடு ஏழு
ஆறாத வடுக்கள் இன்னும்
உயிர்ப்பலி கொண்ட தாகம்
உணர்வுகள் வலித்த நேரம்
பசியுடன் வாடிய உயிர்கள்
மருத்துவ வசதி அற்ற நிலை
எங்கும் கேட்ட ஓலங்கள்
தசைப்பிண்டங்களாக எங்கும்
அழுகுரலின் ஆர்ப்பரிப்புகள்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
வல்லூறுகள் போட்ட குண்டுகள்
எங்கும் இரத்த வெள்ளம்
நந்திக்கடல் நிறை குருதி
ஏனிந்த விதி நம்மவருக்கு
மாறுமோ துயர் மண்ணில்
இன்னும் விடையிலா வினா..
சிவதர்சனி இரா
14/5/2026
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.