சிவந்த மே

வியாழன் கவி -2338

“சிவந்த மே”
ஆண்டுகள் பத்தொடு ஏழு
ஆறாத வடுக்கள் இன்னும்
உயிர்ப்பலி கொண்ட தாகம்
உணர்வுகள் வலித்த நேரம்
பசியுடன் வாடிய உயிர்கள்
மருத்துவ வசதி அற்ற நிலை
எங்கும் கேட்ட ஓலங்கள்
தசைப்பிண்டங்களாக எங்கும்
அழுகுரலின் ஆர்ப்பரிப்புகள்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
வல்லூறுகள் போட்ட குண்டுகள்
எங்கும் இரத்த வெள்ளம்
நந்திக்கடல் நிறை குருதி
ஏனிந்த விதி நம்மவருக்கு
மாறுமோ துயர் மண்ணில்
இன்னும் விடையிலா வினா..
சிவதர்சனி இரா
14/5/2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading