அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

பாட்டன் பூட்டன் காலத்தில்
பழமை என்று நாம் சொன்ன
காதுக்கடுக்கன் குடுமி எல்லாம்
காணாமல் போளது ஒரு காலம்
நாட்டம் கொண்டு இளையவர்கள்
நாக ரீகம் இது என்று
கடுக்கன் பூட்டி காதுகளில்
கருமை கூந்தல் முடி முடிந்து
திரியும் காலம் மீண்டதனை
திரும்பி பார்க்க தெளிவாகும்.
உருளும் உலகில் பழமை என
உள்ள ஒன்று காலத்தால்
அழிந்தது என்று எது உண்டு
அனைத்தும் மீளும் காலம் உண்டு.
புட்மக விமானம் புராணத்தில்
புதுவகை ஹெலி பிளேன் இன்றைக்கு
அற்புத பாணம் வில் அம்பு
ஆனது ஷெல்லாய் இன்றைக்கு.
சித்தர் முனிவர் மெய்ஞானி
திரிபில் இன்றவர் விஞ்ஞானி
இன்றது புதுமையும் உரு மாறும்
இன்னொரு புதுமையில் இது மறையும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading