மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

ஆற்றங்கரை மரமும்
அரசஆளும் முடி சிரமும்
ஆற்றோடு அடிபட்டு
போகும்..நிலைமை
அடுத்த கணம் தலைகீழாய்
மாறும்-இன்று
போற்றியவர் தூற்றுகின்ற
மாற்றங்கள் நாடுதோறும்
நீண்ட நெடு வரலாறு பாரும்.
இந்த
நீதிநெறி அறிந்தாலே நின்மதியும் தொலையாதே
பாட்டி ஒளவை சொல்லிவைத்தாள் கேளும்.பழந்தமிலே நீதி நெறி கூறும்
ஈட்டி வைத்த வெற்றிகளை
காட்டி வென்ற பதவிகளும்
வாட்டமுறும் வயிறு என்றால் மாறும்
காட்டியதெம் தாய்நாடு பாரும்.

யாழ்பாண நூலகத்தில்
ஆக்கங்கள் ஆயிரமாய்
தீக்கு இரை ஆனதும் ஓர் ஆடி.
பாழான பொக்கிஷங்கள்
படையினரால் பொசுங்க வைத்த
பாவியர் ரனிலுக்கும் பங்கு-
பதவியிலே மந்திரியே அன்று
படையினரின் துணையோடு
பல லட்சம் சிங்களவர்
பரவ வைத்த தீயாலே வெந்து
பல நூல்கள் பாழான நொந்து
பரிதவித்து அழுகின்றார் இன்று.
பட்டணத்தார் நஞ்சு அப்பம்
பற்ற வைத்த தீபோல
பற்றி எரி கின்றது தாய்நாடு
பற்ற வைத்தார் தம்மவரே பாடு

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading