” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 236 —குழல் ஓசை —. மூங்கில் குழாயினிலே
மூன்று நாலு துளைக்குள்ளே
தேங்கி கிடக்கும் நல்ல ஓசை
இது தெவிட்டாப்
புல்லாங்குழல் ஓசை
ஆட்டுத் தோலாலே
அமைத்து இரு பக்கம்
கோலி மரத்தாலே
செதுக்க
கொடுக்கும் தவில்
நல்ல ஓசை.
நாத சுரம் கொடுக்கும்
நல்லோசை
தவிலுக்கு
வேத முறை
சுப நிகழ்வு யாவும்
விடாதே இக் குழல் வடிக்கும்
ஓசை
கொம்பு ,தமுக்கு என்ற
குழலாலே
இசை வடிக்கும்
எங்கள் தமிழ் மரபு
இசை கருவி
இதில்
எழும்பும் குழல் ஓசை
அருவி
குழவோசை யாழ் ஓசை
கொடுக்கும்
சிறப்போசை
மழலை பிள்ளை
கதைக்கீடு இல்லை
வள்ளுவனின்
குறள்சொல்லும் உண்மை.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan