நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
நேரம்
தேர்ந்த சாத்திரியாய்
திகழும் ஜயரிடம்
நேர காலம்பார்த்து
அழைப்பு அனுப்பும்
கல்யாணம்
மாப்பிள்ளை வீட்டுக்கு
தோழன் போய்
பெண்பிள்ளை வீட்டுக்கு
தோழி போய்
பால்அறுகு வைத்து
மணவறைக்கு அழைத்துவர
நாள் நேரம் ஆகுதென்று
யார் சொன்னாலும்
கேளார்
வீடிஓ காரன்
வைச்சதே சட்டம்
தாலி கட்டும் வேளையிலும்
தடுப்பான் பொறு என்று
வீடியோ பிடிப்புக்கு
சேர்ந்தோடி நடக்கும்
திருமணம்
ஓர் ஈர் வருடத்துள்
திருமண முறிவு
பிரிவு ஊர் எல்லாம் பேச்சாகும்.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan