சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
நேரம்
தேர்ந்த சாத்திரியாய்
திகழும் ஜயரிடம்
நேர காலம்பார்த்து
அழைப்பு அனுப்பும்
கல்யாணம்
மாப்பிள்ளை வீட்டுக்கு
தோழன் போய்
பெண்பிள்ளை வீட்டுக்கு
தோழி போய்
பால்அறுகு வைத்து
மணவறைக்கு அழைத்துவர
நாள் நேரம் ஆகுதென்று
யார் சொன்னாலும்
கேளார்
வீடிஓ காரன்
வைச்சதே சட்டம்
தாலி கட்டும் வேளையிலும்
தடுப்பான் பொறு என்று
வீடியோ பிடிப்புக்கு
சேர்ந்தோடி நடக்கும்
திருமணம்
ஓர் ஈர் வருடத்துள்
திருமண முறிவு
பிரிவு ஊர் எல்லாம் பேச்சாகும்.
-சிவரஞ்சினி கலைச்செல்வன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading