மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

குற்றச் செயல்கள் கூடிய நாடு
கொலைகள் களவு தினம் தினம் நூறு
பற்று பாசம் பந்தம் மறந்து
பையன் தாயை கொல்வது நடப்பு

ஆசை மீறி அடாத்துகள் கூடி
அடுத்தவன் போல வாழ தாகம்
மோசடி செய்ய ஆசைகள் உந்த
களவு வன்முறை கனத்து போச்சு

பட்டினி உணவு பஞ்ச திருடு
பகட்டு ஆடை நகைக்கு திருடு
முட்ட குடிக்க மோகத்தில் திழைக்க
அவரவர் தேவை மோசடி ஆகி.

புலம் பெயர்ந்தோரின் பணத்தில் வாழ்வு
பொழதும் நாளும் உல்லாச வாழ்வு
உறவுகள் இல்லார் ஆசைகள் கூட
உறுத்திட தேவை குணத்தையே மாற்ற

சட்டம் இருந்தும் கட்டுப்பாடில்லை
சட்டத்தை ஆள்வோர் கொட்டம் கூட
எப்படி நாடு உருப்படும் ?கேடு
இல்லாமை கூட இன்னும் கூடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading