” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

குற்றச் செயல்கள் கூடிய நாடு
கொலைகள் களவு தினம் தினம் நூறு
பற்று பாசம் பந்தம் மறந்து
பையன் தாயை கொல்வது நடப்பு

ஆசை மீறி அடாத்துகள் கூடி
அடுத்தவன் போல வாழ தாகம்
மோசடி செய்ய ஆசைகள் உந்த
களவு வன்முறை கனத்து போச்சு

பட்டினி உணவு பஞ்ச திருடு
பகட்டு ஆடை நகைக்கு திருடு
முட்ட குடிக்க மோகத்தில் திழைக்க
அவரவர் தேவை மோசடி ஆகி.

புலம் பெயர்ந்தோரின் பணத்தில் வாழ்வு
பொழதும் நாளும் உல்லாச வாழ்வு
உறவுகள் இல்லார் ஆசைகள் கூட
உறுத்திட தேவை குணத்தையே மாற்ற

சட்டம் இருந்தும் கட்டுப்பாடில்லை
சட்டத்தை ஆள்வோர் கொட்டம் கூட
எப்படி நாடு உருப்படும் ?கேடு
இல்லாமை கூட இன்னும் கூடும்

Nada Mohan
Author: Nada Mohan